தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு 4கப்
உளுந்து மாவு 1.5கப்
தேங்காய் 1
எண்ணெய் 1லிட்டர்
உப்பு
மாவு தயாரிக்கும் முறை:
பச்சரிசி மாவு :
பச்சரிசியை தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின் நீரை நன்றாக வடித்து விட்டு, அதனை மிக்ஸியில் போட்டு மிக மென்மையாக அரைத்து, சல்லடை கொண்டு சலிக்கவும்.
பின் ஒரு கடாயில் அரைத்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து வறுக்கவும். பின் மீண்டும் ஒரு முறை வறுத்த மாவை மிக்ஸியில் போட்டு அரைத்து , சலித்து எடுக்கவும்.
உளுந்து மாவு:
உளுந்தை ஒரு கடாயில் போட்டு நன்கு வெதுப்பவும். பின் மிக்ஸியில் போட்டு மென்ரைமையாக அரைத்து பிசிறில்லாமல் சலித்து வைக்கவும்.
செய்முறை:
தேங்காயைத் திருகி பால் எடுத்து கொள்ளவும்.
பச்சரிசி மாவு மற்றும் உளுந்து மாவு இரண்டையும் ஒரு மாவு பிசையும் பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு இதனுடன் உப்பு மற்றும் தேங்காய் பால் ஊற்றி நன்கு பிசையவும்.
மாவு ஒட்டாமல் இருக்க கைகளில் சிறிதளவு எண்ணெய் தேய்த்து கொள்ளவும்.
இப்போது சீப்பு சீடை பிழியும் கட்டையில் மாவை எடுத்து கொண்டு கீழே படத்தில் உள்ளவாறு நேர் நேராக பிழியவும்.
பின் கத்தி அல்லது சிறு கம்பி தகடு கொண்டு ஒரே அளவாக மாவை வெட்ட வேண்டும்.
பின் வெட்டிய ஒவ்வொரு துண்டையும் ஆட்காட்டி விரலில் சுற்றி மாவு துண்டின் இரு முனைகளையும் சேர்த்து ஒட்டவும்.
இப்போது எண்ணெயை நன்கு காய வைத்து ஒட்டிய சீப்பு சீடைகளை எண்ணெயில் போட்டு எடுக்கவும்.
இப்போது குழந்தைகளுக்கு சத்தான சீப்பு சீடை தயார். இதை காற்று புகாத டப்பாக்களில் சேமித்து வைக்கவும்.
குறிப்பு:
பச்சரிசி மாவு மற்றம் உளுந்து மாவு இரண்டையும் தயார் செய்து வைத்து கொண்டால் தேவையான போது உடனடியாக சீடைகளை தயார் செய்யலாம்.
பச்சரிசி மாவு 4கப்
உளுந்து மாவு 1.5கப்
தேங்காய் 1
எண்ணெய் 1லிட்டர்
உப்பு
மாவு தயாரிக்கும் முறை:
பச்சரிசி மாவு :
பச்சரிசியை தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின் நீரை நன்றாக வடித்து விட்டு, அதனை மிக்ஸியில் போட்டு மிக மென்மையாக அரைத்து, சல்லடை கொண்டு சலிக்கவும்.
பின் ஒரு கடாயில் அரைத்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து வறுக்கவும். பின் மீண்டும் ஒரு முறை வறுத்த மாவை மிக்ஸியில் போட்டு அரைத்து , சலித்து எடுக்கவும்.
உளுந்து மாவு:
உளுந்தை ஒரு கடாயில் போட்டு நன்கு வெதுப்பவும். பின் மிக்ஸியில் போட்டு மென்ரைமையாக அரைத்து பிசிறில்லாமல் சலித்து வைக்கவும்.
செய்முறை:
தேங்காயைத் திருகி பால் எடுத்து கொள்ளவும்.
பச்சரிசி மாவு மற்றும் உளுந்து மாவு இரண்டையும் ஒரு மாவு பிசையும் பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு இதனுடன் உப்பு மற்றும் தேங்காய் பால் ஊற்றி நன்கு பிசையவும்.
மாவு ஒட்டாமல் இருக்க கைகளில் சிறிதளவு எண்ணெய் தேய்த்து கொள்ளவும்.
இப்போது சீப்பு சீடை பிழியும் கட்டையில் மாவை எடுத்து கொண்டு கீழே படத்தில் உள்ளவாறு நேர் நேராக பிழியவும்.
பின் கத்தி அல்லது சிறு கம்பி தகடு கொண்டு ஒரே அளவாக மாவை வெட்ட வேண்டும்.
பின் வெட்டிய ஒவ்வொரு துண்டையும் ஆட்காட்டி விரலில் சுற்றி மாவு துண்டின் இரு முனைகளையும் சேர்த்து ஒட்டவும்.
இப்போது எண்ணெயை நன்கு காய வைத்து ஒட்டிய சீப்பு சீடைகளை எண்ணெயில் போட்டு எடுக்கவும்.
இப்போது குழந்தைகளுக்கு சத்தான சீப்பு சீடை தயார். இதை காற்று புகாத டப்பாக்களில் சேமித்து வைக்கவும்.
குறிப்பு:
பச்சரிசி மாவு மற்றம் உளுந்து மாவு இரண்டையும் தயார் செய்து வைத்து கொண்டால் தேவையான போது உடனடியாக சீடைகளை தயார் செய்யலாம்.